
நாடறிந்த கலைஞர் வானொலி தொலைக்காட்சிப் புகழ் அபேக் ஆறுமுகம் நேற்றிரவு காலமானார்.பல ஆண்டுகளாக மலேசியக் கலைத்துறையில் ஆடல் பாடல்,நகைச்சுவை, நடிப்பு என பல்வேறு சாயலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு புகழ் பெற்றவர்.
மலேசியக் கலைத்துறைக்கும்,தமிழ் கலைஞர்களுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கி வந்த இவரின் மறைவு,கலையுலகிற்கு பெரும் பேரிழப்பாகும்.
அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று கெடா கூலிமில் நடைபெறுகிறது.



