
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் டாக்டர் துன் மகாதீர் தலைமையிலான பெர்ஜூவாங் கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அமாட் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில்தான் அண்மையில் பெர்ஜூவாங் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க அரசாங்கம் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வந்துவிடுவார் என்ற கவலை துன் மகாதீருக்கு இருப்பதால் நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை பெர்ஜூவாங் ஆதரிக்கலாம் என்றார் அவர்



