
கிள்ளான் பள்ளத்தாக்கில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து கொள்ளாமல் இன்று முதல் நேரடியாக தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தடுப்பூசி போடப்படும் மையங்களுக்கு நேரடியாகச் சென்றால் அவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.
இன்னமும் தடுப்பூசிக்கு பதிந்து கொள்ளாமல் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தடுப்பூசி மையங்களில் இவர்களுக்காக சிறப்பு பாதை ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.



