
தேசிய தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் தற்போது மலேசியாவில்
தினசரி 4 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
3 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவில் கோவிட்-19 பெருந்தொற்றினால் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் தற்போது தடுப்பூசி செலுத்துவதில் காணப்படும் அதிவிரைவு போக்கு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளதாக சிட்னி மோர்னிங் ஜெரால்ட் என்ற சஞ்சிகை செய்தியை வெளியிட்டுள்ளது..
உலகில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் நாடுகளில் பட்டியல் மலேசியாவும் இடம் பிடித்திருப்பதாக அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது..



