
நான் நலமாக இருக்கிறேன். இறந்து விட்டதாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நாட்டின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான டத்தோ சங்கரன் நாயர் தெரிவித்தார்.
கெஅடிலான் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்நோக்கிய வழக்குகளில் வாதாடிய முன்னணி வழக்கறிஞர்களில் இவரும் ஒருவராவார். நோய்த்தொற்று தாக்கத்தினால் இவர் மரணமடைந்துவிட்டதாக நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. மேலும் சட்டத்துறை வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.
பின்னர் தனது முகநூலில் தாம் உயிரோடு இருப்பதாக வும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டத்தோ சங்கரன் நாயர் கேட்டுக்கொண்டனர். பலர் என்னை அழைத்து நலம் விசாரித்தனர். அவர்களுக்கு இவ்வேளையில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
