
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் ஐபிஎப் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு உணவுக் கூடைகளை வழங்கி வருகிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு இதுவரை330 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்த இருப்பதாக ஐபிஎப் இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ்குமார் டத்தோ சம்பந்தன் தெரிவித்தார்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தற்போது பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகிறார்கள்.
இவர்களுக்கு உதவும் வகையில் 330 உணவு கூடைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலுலங்காட் வட்டாரத்தில் செமினி, காஜாங், ரிஞ்சிங், பெர்னாங், தாமான் கெசூமா போன்ற இடங்களில் வீடு வீடாகச் சென்று வசதி மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டதாக அவர் ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
