
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் நேரடியாக பங்கேற்கும் அனைவருக்கு விரைவில் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி அறிவிப்பு செய்தார்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற சட்டமன்றப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
