
நெகிரி மாநிலத்தில் மசீச கட்சி போட்டியிட்டு வரும் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதியில் இனி அம்னோ போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. வரும் பொதுத் தேர்தலில் இந்த தொகுதியில் அம்னோ தனது வேட்பாளரை நிறுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தொகுதி பாரம்பரிய மசீச போட்டியிட்டு வந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ போட்டியிட வேண்டும்.
ஆகவே சிரம்பான் மசீச கட்சியுடன் சிரம்பான் அம்னோ இளைஞர் பிரிவு உறவை முறித்துக் கொள்கிறது என்று அதன் தலைவர் ஜூல் அமாலி தெரிவித்துள்ளார்.
தற்போது இவ்விரு கட்சிகள் இடையில் பூசல் முற்றி உள்ளது.
