
நோய்த்தொற்றால் மரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் அமைதி மறியலில் ஈடுபட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு டத்தாரான் மெர்டேக்காவில் ஒன்றுகூடிய இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் நோய் தொற்றால் மரணித்தவர்களை நினைவு கூறும் வகையில் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது அங்கு காவலில் இருந்த போலிஸார் 17 ஆண்கள் மற்றும் 14 பெண்களை கைது செய்து பிளேக் மரியா போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
போலீசார் இவர்களை கைது செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
