
அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு பெரிக்கத்தான் நேஷனல் எம்பிக்களின் நிபந்தனையுடன் கூடிய சத்திய பிரமாணம் செல்லாது என்று பிரபல வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன் குறிப்பிட்டார்.
பிரதமர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த ஒரு சத்திய பிரமாணம் நிபந்தனை இன்றி இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
முன்னாள் பிரதமர் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான 50 எம்பிக்கள் நிபந்தனையுடன் கூடிய சத்திய பிரமாணத்தை டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
