
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக பதவியேற்றால் துணைப் பிரதமர் பதவி பெர்சத்து கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருப்பதாக உத்துசான் மலேசிய இணையதளம் செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த துணைப் பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மற்றும் டத்தோஸ்ரீ ரிடுவான் அவர்கள் பெயர்கள் அடிபடுகின்றன.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமராக இருந்தபோது சிறப்பு பிரதமர் பணிகளை டத்தோஸ்ரீ ரிடுவான் கண்காணித்தார்.
மேலும் பெர்சத்து கட்சி தொடங்கிய 12 பேரில் இவரும் ஒருவராவார்.
அந்த வகையில் துணை பிரதமர் பதவி இவருக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.



