
நோய்த்தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு நாட்டின் முன்னணி கலைஞரும் பாடகருமான ரவி தனது சொந்த முயற்சியால் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மேடைகளில் சிவாஜி மற்றும் எம்ஜிஆரை போல் உடை அணிந்து பாடலுக்கு ஏற்றவாறு நடித்துக் கொண்டிருக்கும் கலைஞர் ரவி,கோலா லங்காட் வட்டாரத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு காய்கறிகளையும் உணவு கூடைகளையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவியை கொண்டு தனது சொந்த முயற்சியால் இவர் வாரம்தோறும் வசதி குறைந்த மக்களுக்கு உதவி வருவதை கோலாலங்காட் வட்டார இந்திய மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
