32.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

🚨 கிளந்தானில் 3.1 டன் அரிசி பறிமுதல் – கடத்தல் முயற்சி முறியடிப்பு

🔥 Views : 2,257
👁 Reading Now : 68

கிளந்தானில் பொது நடவடிக்கைப் படை (PGA) அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், மொத்தம் 3.1 டன் அரிசியும், 68,785 ரிங்கிட் மதிப்புள்ள மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தும்பாட் மற்றும் தானா மேரா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, எல்லைத் தாண்டிய கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமலாக்க முயற்சியின் ஒரு பகுதியாகும்.

தும்பாட்டிலுள்ள Pangkalan Haram Simpangan மற்றும் தானா மேராவில் உள்ள Kampung Lalang Pepuyu பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் கொண்டு செல்லப்பட்ட அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொது நடவடிக்கைப் படையின் மூத்த உதவி ஆணையர் அகமட் ரட்ஸி ஹுசைன் கூறுகையில், காலை 7.30 மணியளவில் தும்பாட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், கோலோக் ஆற்றில் இருந்து வந்த படகிலிருந்து வெள்ளை நிற மூட்டைகள் மிட்சுபிஷி பஜேரோ வாகனத்தில் இறக்கப்படுவதை கவனித்ததாக தெரிவித்தார்.

அதிகாரிகள் அணுகியதும் சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக படகில் ஏறி, தாய்லாந்து எல்லை நோக்கி அமைந்துள்ள கோலோக் ஆற்றின் கரை வழியாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. எனினும், அந்த இடத்தில் இருந்த மிட்சுபிஷி பஜேரோ வாகனம் கைப்பற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அந்த வாகனத்தில் 1,485 கிலோகிராம் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட இந்த அரிசி, கோத்தா பாரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் வாகனங்கள் மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles