
வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் தீப்பற்றி எரிந்து சம்பவத்தில் உயிரிழந்த மூன்று இந்தியர்கள் சடலங்கள் மரபணு சோதனைக்கு பிறகே குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பினாங்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மரபணு சோதனை முடிவு தெரிந்த பிறகே ஒப்படைக்கப்படுமென சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக நேற்று மருத்துவமனைக்கு வந்திருந்த குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஜோர்ஜ்டவுன் ஜாலான் மஸ்ஜித் நெகிரியில் காரொன்று மரத்தில் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூவர் கருகி மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
