
வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற மிகக் கடுமையாக உழைப்போம் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.நமது அடுத்த இலக்கு வரும் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவதான்.
இந்த வெற்றிக்காக இப்போதே நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நம் அனைவரும் ஒன்றிணைந்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போராடுவோம் அதேசமயம் வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றியை உறுதி செய்வோம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய சவால்களை எதிர்கொள்ள நாம் இப்போதே தயாராகுவோம் என்றார் அவர்.
