
வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கூடுகிறது.
அப்போது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு முழு ஆதரவு வழங்க எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று சரவா சிபு ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிங் தெரிவித்தார்.
பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 105 எம்பிக்களை கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
