
ஜாலான் கூச்சிங்கில் இருந்து கோலாலம்பூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காதல் ஜோடியை எட்டி உதைத்த மூன்று கொள்ளையர்கள் அவர்களிடம் கொள்ளையடித்தனர்.
காதல் ஜோடி பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கொள்ளைர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தோள் பகுதியில் கடுமையான காயங்களுக்கு ஆளான பெண் கோலாலம்பூர் பெரிய மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
சித்தி நூரி அஸிஸா என்று அடையாளம் கூறப்பட்ட அந்தப் பெண்ணின் கை தற்போது அகற்றப்பட்டுள்ளது என்று அவரின் தாயார் வேதனையுடன் தெரிவித்தார்.
