28.8 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

மீரா கட்சியின் உதவி தலைவர்களாக டத்தோ குமார் அம்மன், என்.எஸ். மணியம் நியமனம்

மலேசிய சிறுபான்மை உரிமைகள் செயல் கட்சி என்றழைக்கப்படும் மீரா கட்சியின் தேசியத உதவித் தலைவர்களாக டத்தோ குமார் அம்மன் மற்றும் என்.எஸ். மணியம் ஆகியோர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.
மீரா கட்சிக்கு இடைக்காலத் தலைவராக கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி கே.பி.சாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இப்போது இவரின் தலைமையில் நாடு தழுவிய அளவில் புதிய கிளைகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நிலையில் நாட்டில் பிரபல அரசியல்வாதிகளில் ஒருவரான டத்தோ குமார் அம்மன் மற்றும் சிப்பாங் தாமான் டிங்கில் ம இகா கிளைத் தலைவராக இருந்த என். எஸ். மணியம் ஆகியோர் மீரா கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் கட்சியின் தேசிய உதவி தலைவர்களாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தலைவர் கே.பி. சாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles