
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் Sop விதிமுறைகளை மீறி கூத்து கும்மாளம் அடித்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோகூர் இஸ்கண்டர் புத்ரில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் அதிகாலை 4:00 மணிக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது 10 ஆண்களும் 3 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர் 17 வயதுக்கு கீழ் பட்டவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு ஊழியர் ஒருவரும் இதில் கைது செய்யப்பட்டார் என்று இஸ்கண்டர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் டிஸுல்கைய்ரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட பதினோரு பேர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
