
ஜப்பான் தோக்கியோ வில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று தனது முதல் தங்கத்தை வென்றது
மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்றார்.
இப்போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.
இதனிடையே ஆண்களுக்கான ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திரா வெள்ளிப் பதக்கமும் சுந்தர் சிங் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பரா ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
