
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராக டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அமாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இவர் உயர்க் கல்வி அமைச்சராக இருந்தார்.
அப்போது அவர் திறம்பட பணியாற்றவில்லை.
அவரை மீண்டும் உயர்க் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டது தொடர்பில் மலாயா பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் சங்கம் கேள்வியை எழுப்பியுள்ளது.
