
நாட்டில் கோவிட் நோய்த்தொற்றுக்கு நேற்று வரை 16, ஆயிரத்தை 382 பேர் மரணம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 295 பேர் இந்த நோய்க்கு பலியானதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் மருத்துவமனையில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 713 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் தீவிர சிகிச்சை பிரிவில் 1,033 பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
