
நாட்டில் 12வயதுக்கு கீழ்ப்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அறிவித்தார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி மலேசியாவில் வழங்கப்படவில்லை. இவ்விவகாரம் மீது எஃப்.டி.ஏ. எனப்படும் மருந்து மற்றும் உணவு நிர்வாக அமைப்பு, தேசிய சுகாதார கட்டுப்பாட்டு அமலாக்கத் தரப்பு போன்றவை இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
