
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகள், தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்திருப்பதை முன்னிட்டு ரயில் பயண சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு நிமிடத்திலிருந்து 10 நிமிட இடைவெளியில் ரயில் சேவைகள் மேற்கொள்ளப்படும் வேளையில், 100 விழுக்காடு எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றப்படுவதால், சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் சுயமாகவே ரயிலில் sop இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு, Prasana நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.



