
செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் ஏற்பாட்டில் இன்று 200 டாக்ஸி ஓட்டுனர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன. செராஸ் வட்டாரத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர் செல்வராஜா ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இந்திய டாக்ஸி ஓட்டுனர்களுக்கும் உணவு கூடைகள் வழங்கப்பட்டன. வருமானம் இழந்து கஷ்டப்படும் இவ்வேளையில் எங்களுக்கு உதவி புரிந்த செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் மற்றும் செல்வராஜாவுக்கு டாக்ஸி ஓட்டுனர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
