
பக்காத்தான் தலைவர்களுடன் சீர்திருத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாடாளுமன்றத்தின் விருந்து மண்டபத்தில் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று மாலை கையெழுத்திடுவார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வர அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதார நிலைத்தன்மையை உண்டாக்க இரு தரப்புக் கட்சிகளும் ஒப்புக் கொண்டன. இதில் இஸ்மாயில் சப்ரி உட்பட கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜசெக தலைமை செயலாளர் , லிம் குவான் எங், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் உப்கோ தலைவர் டத்தோஸ்ரீ மாடியூஸ் தங்காவ் ஆகியோரும் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
