
அரசுடன் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதர கட்சிகளை பக்காத்தான் ஹராப்பான் ஒதுக்கியது தொடர்பில் பெஜுவாங் கட்சியின் கூட்டரசுப் பிரதேச தலைவர், கைருடின் அபு ஹாசான் வருத்தம் தெரிவித்தார். அண்மையில் பிரதமருக்கான வேட்பாளரின் பெயரை மாட்சிமைத் தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கும் போது கூட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவாளிக்கக் கோரிக்கை விடுப்பதற்கு பக்காத்தான் தலைவர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமட்டைச் சந்தித்தனர். தற்போதைய எதிர்கட்சித் தலைவரை நாட்டின் 9ஆவதுப் பிரதமராக்கும் கனவை நிறைவேற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம். ஆனால் இன்று இதர எதிர்க்கட்சிகளை ஒதுக்கியது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பியுள்ளார்.
