
No Anwar No Dap என்ற முழக்கம் இன்று அழிந்துவிட்டது என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி தெரிவித்தார். ஜ.செ.க. வேண்டாம் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டாம் என்று நிராகரிக்கும் ஒருசில அம்னோ தலைவர்களின் முழக்கம் இன்று அழிந்து விட்டது என்று டத்தோ முகமட் புவாட் ஸார்காசி சுட்டிக்காட்டினார். பக்காத்தான் கூட்டணிக்கும் மத்திய அரசுக்குமிடையே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து முகமட் புவாட் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். முந்தைய அரசு தோல்வியுற்றக் காரணத்தால் இன்றைய நாள் வரலாற்றில் புதிய அரசாங்கம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் சொன்னார்.
