
அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப் போதிலும் எதிர்கட்சியாக பக்கத்தான் தொடர்ந்து தனது பங்கை ஆற்றும் என்று டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தெரிவித்தார். இப்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு உள்ளது. ஒருவேளை நிறைவேற்றத் தவறினால் அது நம்பகத்தன்மை மற்றும் பக்கத்தானின் ஆதரவையும் இழந்து விடும். பக்கத்தானை எதிர்கட்சியாகப் பங்காற்றவும் தேவைப்பட்டால் அரசை விமர்சிப்பதையும் தடுக்க ஒப்பந்தத்தில் ஏதுமில்லை என்றார் அவர்
