
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு பதிலாகப் புதிய பிரதமராகத் தாம் பொறுப்பேற்றால் தேசிய மீட்சி மன்றத் தலைவராக துன் டாக்டர் மகாதீர் முகமட்டை நியமிப்பதாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதற்கு முன் உறுதியளித்திருந்தார் என்று டத்தோஸ்ரீ முகரிஸ் துன் மகாதீர் தெரிவித்தார். தேசிய மீட்சி மன்றத்தை அமைப்பது உண்மையில் மகாதீரின் பரிந்துரையாகும். இதற்கு மகாதீர்தான் தலைமையேற்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்குக் காரணம் அவரிடம் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஒருவேளை இந்த மன்றத்திற்கு தலைவராகத் தம்மை நியமித்தால் பெஜுவாங் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக மகாதீர் அறிவித்து விட்டதாக முக்ரிஸ் குறிப்பிட்டார்
