
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்.19 நோய்த் தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்ட சுமார் 250,000 குடும்பங்களுக்கு இதுவரை உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பெருந்தொற்று காரணமாக சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியில் மட்டுமின்றி பொருளாதார மற்றும் வாழ்வாதார ரீதியிலும் உதவ மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த உதவித் திட்டங்களில் ஒருபகுதியாக சிலாங்கூர் மாநிலத்தில் 250,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கி உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.


