
நாட்டில் 18 வயதினர் இயல்பாகவே வாக்களிப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது என்று சட்டத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதை அமல்படுத்த அரசாங்கம் சிறந்த முறையில் முயற்சிகளை மேற்கொள்ளும். மேலும் 18 வயதினர் வாக்களிப்பது மற்றும் வாக்காளர் பதிவை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அமுல்படுத்தும் படி சரவா கூச்சிங் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் படாது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
