
Emco எனப்படும் மக்கள் நடமாட்டம் உத்தரவு இல்லாத பகுதிகளில் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மளிகைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் நிர்வாகம் மீதான பணிக்குழுவிடம் நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு பரிந்துரை செய்ய இருப்பதாக மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஷாமுடின் தெரிவித்தார். தற்போது உணவகங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை மட்டுமே திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது.
