
நேற்று ஒரேநாளில் நாட்டில் மொத்தம் 250 கோவிட் -19 நோய்த்தொற்று தாக்கத்தினால் உயிர் இழந்தனர். இதுவரை நாட்டில் 24,931 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பதிவாகிய இறப்புகளில் 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்தனர். மேலும் சிலாங்கூர் 65 இறப்புகள் பதிவாகி உள்ளது.



