
நாடு தழுவிய அளவில் கட்டப்பட்டு வரும் 12 மருத்துவமனைகள் 12 ஆவது மலேசிய திட்டத்தில் பூர்த்தியாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார். வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்படும். நவீன வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனைகளில் மக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
