
பங்கோர் தீவில் சுமார் 80 விழுக்காடு முதியவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதால், விரைவில் அந்த சுற்றுலா தளம் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்படும். விதிமுறைகள் நிறைவுப் பெற்றிருப்பதால் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு பங்கோர் தீவை திறந்து விடுவதற்குரிய வாய்ப்பு இருப்பதாக பேரா மாநில வீடமைப்பு ,உள்ளாட்சி மற்றும் சுற்றுலா செயற்குழுத் தலைவர் டத்தோ நோலி அஷிலின் முகமட் ரட்ஸி கூறினார். இன்னும் சுற்றுலா கலை மற்றும் கலாச்சார அமைச்சு,தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
