
தற்போதைய சூழலில் கோவிட் தொற்றின் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டிருப்பதால் மலாக்கா மாநிலத் தேர்தலை நடத்துவதை மலேசிய மருத்துவச் சங்கம் எதிர்க்கிறது. நாடு தொற்றிலிருந்து மீண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்ப்படும் போது தேர்தலைக் கட்டாயப்படுத்தி நடத்து அளவுக்கு மலாக்காவிலுள்ள அரசியல்வாதிகள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய பெரும் சுயநலவாதிகளாகத்தான் இருக்கின்றனர். பொதுமக்களில் ஏராளமானோர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்ட போதிலும் இந்நாட்டில் தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்வாகத்தான் பதிவுச் செய்யப்பட்டு வருகிறது. இத்தொற்றினால் சிறார்களில் ஏராளமானோர் ஆதரவற்ற நிலையில் இருக்கும் வேளையில், பெண்கள் தங்கள் கணவரை இழந்துள்ளனர் என்று அது தெரிவித்துள்ளது
