
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதால் மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்ததுள்ளது இதனால் மீண்டும் தேர்தல் நடத்தப் பட்டால், ஏற்படும் பலவித பாதிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. ஏனெனில் நாடு இன்னும் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தில் உள்ளது. இந்நேரத்தில் மலாக்கா மாநிலத்தில் தேர்தல் நடத்துவது முறையாகது. ஏனென்றால் இது மலாக்காவுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை இழந்து விட்ட ஒருவரிடம் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த அனுமதிப்பது ஏற்று கொள்ள முடியாது. தேசிய அளவில் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கும் வண்ணம், கடந்த தேர்தலில் மலாக்கா மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து, மாநில அதிகாரத்தை பக்காத்தான் ஹராப்பானிடம் திருப்ப ஒப்படைப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
