
தென் செபராங் பிறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலை போக்குவரத்து நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக ஜேபிஜே அதிகாரிகள் 136 சம்மன்களை வெளியிட்டனர். சம்பந்தப்பட்ட லோரிகள் அதன் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்தசாமான்கள் வெளியிப்பட்டதாக சாலை போக்குவரத்து இலாகா அதிகாரி தெரிவித்தார். கடந்த நான்கு நாட்கள் நடைபெற்ற சோதனையின் வழி சுமார் 40 ,800 வெள்ளி சம்மன்கள் வெளியிடப்பட்டன. வாகன உரிமம் இல்லாதது,கனரக வாகனங்களை ஏற்றிச் சென்றது உட்பட பல்வேறு குற்றங்கள் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
