
நாட்டில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களின் வரலாற்றுப் பதிவாக உருவாக்கும் இலக்கில் அகப்பக்கம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதாக மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். “கோவில் ஆய்வு மேம்பாட்டுத் துறை” அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பில் நாட்டிலுள்ள சமயம் சார்ந்த பொது இயக்கங்களுடன் சந்திப்பு நடைபெற்றதாக அவர் சொன்னார்.
