
சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்களில் நீர விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்துள்ளது. நீர் விநியோகத் தடையை சமாளிப்பதற்காக போதுமான அளவு நீரை முன்கூட்டியே சேகரித்து வைக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வரும் 13 ஆம் தேதி தொடங்கி போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கோலாலம்பூர், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், உலு சிலாங்கூர், கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூர் மக்களுக்கு முன்கூட்டியே நினைவுறுத்துப் பட்டுள்ளது.
