
12 ஆவது மலேசிய திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டதாக சபாநாயகர் டத்தோ அஸாஹர் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 12ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 26 அமைச்சர்கள் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில் நேற்று 12 ஆவது மலேசிய திட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக டத்தோ அஸாஹர் தெரிவித்தார்.
