
வேன் ஒன்றில் மூன்று மணி நேரம் தனித்து விடப்பட்ட எட்டு வயது நிரம்பிய autisme சிறுமி ஒருவர் மரணம் அடைந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது சைட் தெரிவித்தார். சிரம்பான் தாமான் நூசாரி அமான் பராமரிப்பு மையத்தின் முன் சம்பந்தப்பட்ட வேன் ஒன்றில் அந்த சிறுமி தனித்துவிடப்பட்டார். ஆனால் அந்த வேனில் அந்த சிறுமி இருந்ததை வேன் ஓட்டுநர் உணரவில்லை. மூன்று மணி நேரத்திற்கு பின்னரே அந்த சிறுமி அந்த வேனில் தனித்து விடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த சிறுமி இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.
