
பினாங்கு கொம்தார் துன் அப்துல் ரசாக் வளாகத்திலுள்ள வங்கியின் முன்புறம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களை ரோத்தானால் அடித்த 2 பேரை போலீஸ் கைது செய்ததாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர், சோபியான் சந்தோங் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் பிச்சை எடுத்த 2 பேரில் ஒருவர் அதே நாளில் போலீசில் புகார் செய்தார். இச்சம்பவத்தில் இருவருக்கும் முதுகு, வலது கை முட்டி, சதைப் பகுதியில் வீக்கமடைந்ததில் அவர்கள் பினாங்கு பெரிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றார்



