
சபா லாபுவான் வாரியத்தின் துணைத் தலைவராக இருந்தபோதே குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய நிறுவனத்துக்கு அரசாங்க குத்தகை வழங்கியதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் மறுத்தார். இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. வாரிசான் கட்சியைச் சேர்ந்த இவர் ஒரு லட்சம் வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


