
கடந்த ஜுன் மாதம் கோவிட்-19 நெருக்கடியில் பாதிப்புகுள்ளான இந்தியர்களுக்கு என அறிவித்த ஜொகூர் மாநில சிறப்பு உதவி திட்டத்தில் மக்கள் பயன் அடைந்தார்களா என ஜசெக சந்திர சேகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாண்டு ஜுன் 12 தேதி அறிவித்து அந்த திட்டம் 15ஆம் தேதி முதல் இணையம் வழியாக மணுபாரங்களை பதிவிறக்கம் செய்து விணணப்பிக்கலாம் என மாநில சுகாதார மற்றும் சுற்று சுழல் ஆட்சி குழு தலைவர் திரு ரெ.வித்தியானந்தன் அறிவிப்பு செய்து மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் தெரிவிக்கபட்டது போல் மணு செய்தார்கள் என்பது கூறிப்பிடதக்கது. அந்த உதவி திட்டம் கோவிட் நெருக்கடியில் பாதிப்பு ஆளானவர்களுக்கு துணை புரியும் என பெரிதும் எதிர்பார்புடன் மணு போட பட்டது. 2021 ஆம் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கபட்ட 40 லட்சம் நிதியில் இருந்து ஒரு பகுதி இந்த கோவிட் காலத்தில் மக்களுக்கு உதவும் என எதிர்பார்க்கபட்டது என தெரிவித்த திரு சந்திர சேகரன். அந்த நிதி மக்களுக்கு சென்றுஅடைந்ததா என வித்தியானந்தன் அறிவிக்க வேண்டும் என தனது அறிக்கையில் கேட்டு கொண்டாதோடு மணு போட்டவர்களுக்கு அந்த நிதி முறையாக சென்று அடைந்ததா என்று தெரிவிக்க வேண்டும் என சந்திர சேகரன் கேட்டு கொண்டார்.
