
சுக்கா எனப்படும் சிலாங்கூர் சுகாதார சமூக தன்னார்வலர் திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த தன்னார்வலர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் இணைந்த 18 வயதுக்கும் மேற்பட்ட உடல் ஆரோக்கியம் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்


