
சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிவடைந்து இருப்பதால் நேற்று மாலை முதல் பல இடங்களுக்கு நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது. சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு தேக்கம் அருகிலுள்ள இடங்களில் நீர் விநியோகம் மீண்டும் திரும்பியுள்ளது. நாளை சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேல் அனைத்து இடங்களிலும் நீர் விநியோகம் மாமுல் நிலைக்கு திரும்பும் என்று ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
