
தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளைக் குறைப்பது குறித்து புதன்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது



