
பேரா மாநிலத்தில் 300 ஆசிரியர்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்று மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. சில ஆசிரியர்கள் தடுப்பூசி போடுவதற்கு காத்திருக்கிறார்கள். மேலும் பலர் தடுப்பூசிக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர் பற்றி விபரங்கள் சேகரிக்க மாநில கல்வித்துறை ஈடுபட்டுவருகிறது.



